இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Sunday, September 4, 2011

உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட போட்டி

0 கருத்துக்கள்


கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் அனுசரனையுடன் உருத்திரபுரம் உழவர்ஒன்றியம் விளையாட்டுக் கழகம் நடத்தும் கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக்கில் பதிவு  செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட விலகல் முறையிலான சுற்றுப் போடடி.
கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் அனுசரனையுடன் உருத்திரபுரம் உழவர்ஒன்றியம் விளையாட்டுக் கழகம் நடத்தும் கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக்கில் பதிவு  செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட விலகல் முறையிலான சுற்றுப் போடடி இன்று (03.09.2011) காலை முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 14 கழகங்கள் பதிவு செய்து போட்டியிட்டு வருகின்றன.
 இப் போட்டியில் முதல் போட்டியாக திருநகர் விளையாட்டுக் கழகத்தினை  எதிர்த்து பரந்தன் மத்தி விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் திருநகர் விளையாட்டுக் கழகம் 2 : 0 என்ற ரீதியில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து பூநகரி நண்பர்கள் விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் 3 : 0 என்ற ரீதியில் வெற்றிபெற்றது.
மூன்றாவது போட்டியில் ஜெயந்திநகர் பிறைக்சன்  விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து வட்டக்கச்சி  இளந்தளிர் விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் ஜெயந்திநகர் பிறைக்சன் விளையாட்டுக் கழகம்    2 : 0 என்ற ரீதியில் வெற்றிபெற்றது.
நாண்காவது போட்டியில் செந்தாரகை விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து பரந்தன் இளைஞர் வட்டம் விளையாட்டுக் கழகம் மோத இருந்தது. ஆனால் பரந்தன் இளைஞர் வட்டம் விளையாட்டுக் கழகம் சமூகமளிக்காத காரணத்தால் செந்தாரகை விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஜந்தாவது போட்டியில் பூநகரி ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கிளிநொச்சி இளம்பறவை  விளையாட்டுக் கழகம் மோத இருந்தது. ஆனால் கிளிநொச்சி இளம்பறவை  விளையாட்டுக் கழகம் சமூகமளிக்காத காரணத்தால் பூநகரி ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்தும்  நாளையும் போட்டிகள் நடைபெறும் என்பதோடு அரையிறுதி; போட்டிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 08:30 மணிக்கும், இறுதிப் போட்டி அன்றையதினம் மாலை 15:30 மணிக்கும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப் போட்டிகளை ஒழுங்கமைத்து நடத்திவரும் உழவர்ஒன்றியம் விளையாட்டுக் கழகத்தனருக்கு பராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


காட்சிப்போட்டியாக உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக்கழக பெண்கள் அணியினரும் வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக்கழக பெண்கள் அணியிரததும் போட்டி இடம் பெற இருப்பது சிறப்பம்சமாகும். இந்த சிறப்பு போட்டியும் இடம்பெற இருப்பதால் வீரர்களுக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 






புகைப்படங்கள் விரைவில் இணைக்கப்படும்.
 தகவல் மயூரன்

0 கருத்துக்கள்:

Post a Comment