இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Thursday, September 9, 2010

உருத்திரபுரம் நாட்குறிப்பு 1

0 கருத்துக்கள்


யாழ்ப்பாணம் கண்டி வீதியில் கிளிநொச்சி நகருக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ளதே உருத்திபுரம் கிராமம். இது 1948-1950 ம் ஆண்டுகளில் அரசினால். ஏற்படுத்தப்பட்ட குடியேற்றறத் திட்டமாகும். வடமாகாணத்தின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டும், அதேவேளை அக்காலத்தில் வன்னிப்பகுதிக்குக் குடிபெயர்ந்து வாழ விருப்பமும் கொண்டவரகளையே குடியேற்றினர். அவ்வாறு குடியேற வந்தவர்களுக்கு குடியிருக்க வீடு, கிணறு, தேவையான விவசாய உபமரணங்கள் சிலவும் கொடுத்தே குடியேற்றினர். அக்காலத்தில் காடாகவும் எவ்வித வசதிகளுமற்ற நிலையிலுமே எமது முன்னைய தலைமுறை எமக்காகத் தம்மை அர்ப்பணித்தனர். இதற்கு முன்னனர் கிளிநொச்சி நகருக்கு மேற்கே கணேசபுரம் கிராமம் குடியேற்றப்பட்டு விட்டது. அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் கால்நடையாவே கிளிநொச்சிவரை சென்று வரவேண்டும். துவிச்சக்கர வண்டி, மாட்டுவண்டி வசதியிருந்தவர்கள் அதனைப்பாவித்தனர். பின்பு ஒரு நாளைக்கு இரண்டு தரம் மட்டுமே பேருந்து சேவை நடைமுறைக்கு வந்தது. அது யாழ்ப்பாணத்திலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டுப் பத்து மணிக்கு ஒன்றும், மாலை இரண்டு மணிக்கு மற்றொண்றுமான சேவைமட்டுமே..
கிளிநொச்சியிலிருந்து நடந்து உருத்திரபுரம் வருபவர்கள் கணேசபுரம் (பழையகொலனி) ஊடாக நடந்து தற்போது இருக்கும் இந்துக் கல்லூரியின் கிழக்கே காடாக இருந்த பகுதியூடாகக் குறுக்கறுத்து கரடிப்போககு- உருத்திரபுரம் பிரதான வீதியை அடைந்து பின்னர் நடப்பர்.

ஆரம்பத்தில் பாடசாலை
ஆரம்பத்தில் (கூழாவடியென்று இப்போது குறிப்பிடப்படும்) உருத்திரபுரம் குஞ்சுப்பரந்தன் வீதிகள் சந்திக்கும் பகுதியில் ஓலைக்குடிசையாக ஆரம்பிக்கப் பட்டு மதிப்பிற்குரிய திரு கதிரவேலு வாத்த்தியார் அவர்களால் நடத்தப்பட்ட ஒனறேயொன்றுதான் பாடசாலையாகும்.

தொடரும்...

திரு: க.கயிலாயநாதன்

உங்கள் கருத்துகளை கட்டாயம் பகிருங்கள்.
எமது மின்னஞ்சல் duruthirapuram@gmail.com

0 கருத்துக்கள்:

Post a Comment