மீண்டும் புத்துயிர் பெற்றது உருத்திரபுரம் நண்பர்கள் அணி.
யாழ்ப்பாணம் உரும்புராய் அன்ணாக்கர் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட அணிக்கு 7பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் உருத்திரபுரம் நண்பர்கள் அணி 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
நீண்ட நாள் இடைவெளியின் பின் உருத்திரபுரம் கிராமத்தில் உள்ள உதைப்பந்தாட்ட வீரர்கள் ஒன்றிணைந்து உருத்திரபுரம் நண்பர்கள் அணி என்ற பெயருடன் யாழ்ப்பாணத்தில் உள்ள மிக திறமையான கழகங்களுடன் மோதி 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்ரால் உருத்திரபுரம் நண்பர்கள் அணி விளையாடிய 5 போட்டிகளில் மொத்தாமாக 23 கோல்களைப் போட்டு அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்து இருந்த வேளை துரதிஸ்ட வசமாக அரை இறுதிப் போட்டியில் தண்ட உதை மூலம் 3:2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து இருதிப் போட்டிக்கான வாய்ப்பினை இழந்தது.எனினும் அச் சுற்றுப்போட்டியில் சிறந்த விளையாட்டுக் கழகமாக உருத்திரபுரம் நண்பர்கள் அணி தேரிவு செய்யப்பட்டதுடன் உருத்திரபுரம் கிராமத்தின் பெருமையினை நிலைநாட்டி உள்ளார்கள் உருத்திரபுரம் நண்பர்கள் அணியினர்.
தொகுப்பு :- யாழ்ப்பாணத்திலிருந்து பிரதீஸ்
நண்பர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.