"சேனா" என்று உன்னை
செல்லமாய் அழைத்தோம் .
செய்தோம் என்ன தவமென்று
எண்ணியே பலமுறை வியந்தோம்
சென்றாய் எங்கு நீ?
உதைபந்துக் களங்களில்
உன் முகந் தேடுகிறோம்
செல்லமாய் அழைத்தோம் .
செய்தோம் என்ன தவமென்று
எண்ணியே பலமுறை வியந்தோம்
சென்றாய் எங்கு நீ?
உதைபந்துக் களங்களில்
உன் முகந் தேடுகிறோம்
நெற்றி பிளந்தோடிய காயம் வந்தும்
சுற்றிக்கட்டிய கைக்குட்டையுடன்
சுற்றிக்கட்டிய கைக்குட்டையுடன்
பற்றிய உறுதியுடன் நின்றாய் - நீ
தட்டிய பந்தும் மறவாது வசந்தீ
தட்டிய பந்தும் மறவாது வசந்தீ
கோல் காப்பு பணியில்
தூண்போல் நின்றவன் நீ
கோப்பைகள் நாம் தூக்க
காரணமாய் இருந்தவன் நீ
ஆறுநாள் தாடியுடன் ஆடுகளம் வருமுனக்கு
நூறுபேர் வந்தாலும் இணையாகுமா?
எத்தனை உதைகளைத் தடுத்தாய் !
ஏன் உன் உயிரிழந்து விழுந்தாய் ?
எங்கு நீ சென்றாலும்
எம் நண்பனே உன்னை மறவோம்
"உன் பெயர் சொல்லியே
பல கோப்பைகள் வெல்வோம்
- குணா -
அனுப்பியவர் : பிரதீஸ்
தமிழீழத்தின் சிறந்த கோல்காப்பாளருக்கான விருது வென்ற செல்லமாய் "சேனா" என்று அழைக்கப்படும் இந்த வீரன் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட ஏ அணியின் கோல்காப்பாளர்.
0 கருத்துக்கள்:
Post a Comment