இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Sunday, October 10, 2010

என் கனவு உருத்திரபுரம் - எழுதுவது மா.குருபரன்

0 கருத்துக்கள்
என் அறிமுகம்: நான் குருபரன். எனது ஆரம்ப கல்விகள் பற்றிமா றோ.க.வி இலும் இடம் பெயர்ந்த பின் அதாவது 1996 இன் பின் உருத்திரபுரம் மகாவித்தியாலயத்திலும் உயர்தரம் கிளிநொச்சி மத்தியகல்லூரியிலும் பயின்றேன். என் பற்றிய அறிமுகத்திற்கு இவை போதுமானவையே.. :P எனது வலைப்பதிவு பக்கம் வருவதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்
********************************************************************
எமது குறும்புகளையும் குழப்படிகளைம் சகித்துக்கொண்ட உருத்திரபுரத்தின் அத்தனை தெருக்களுக்களும் இந்த நினைவுகளும் கனவுகளும் சமர்ப்பணம். நான் படித்த பாடசாலைகளில், நான் விளையாடிய மைதானங்களில், நான் ஒடித்திரிந்த கோயில் திருவிழாக்களில், நண்பர்களோடு சேர்ந்து செய்த அட்டகாசங்களில், நான் பழகிய மனிதர்களில் என்னை பாதித்த அத்தனை நினைவுகளையும் உங்களுடன் பகிர்கிறேன்....

கிராமம் என்றால் எப்படி இருக்கும் என்று யாராவது யோசித்தால் நிட்சயமாக வரவேண்டியது உருத்திரபுரம் கிராமத்திற்கே.சுற்றி மரங்கள்,குளங்கள்,வாய்க்கால்கள்,வயல்கள்,கோயில்கள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,மைதானங்கள்,அங்காடிகள்,மதவுகள் வலிகளற்ற காற்று,ஒற்றுமையான மக்கள், வளம் நிறைந்த மண்.. இப்படி உருத்திரபுரத்தின் அழகையும் செழிப்பையும் உணர்ந்தால்தான் புரியும்.

மாலை நேரத்தில் வீதிகளில் விடையாடும் சிறுவர்கள்..மதவுகளில் இருந்து அரட்டையடிக்கும் பெருசுகள்...கோயில்களை சுற்றும் குமரிகள்..அங்காடிகளை மொய்க்கும் மக்கள் என உருத்திரபுரத்தின் வீதிகளில் பசுமைகள் தான் அதிகம்...


தொடரும்...

உங்கள் நினைவுகளையும் இங்கு தொடர்பதிவாகவோ அல்லது ஒர் பதிவிலோ  எழுதுவதாயின் எழுதி அனுப்பி வைக்க வேண்டிய முகவரி duruthirapuram@gmail.com

0 கருத்துக்கள்:

Post a Comment