முந்தய பதிவுகள்.
குறிப்பு 1
அச்சந்தியிலிருந்து(கூழாவடி) மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும்.அச்சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும். தற்போது அவ்வீதி நீவில் என்ற கிராமத்தினூடாகவே செல்கின்றது. ஆரம்பத்தில் அப்பாதையின் இருமருங்கும் அடர்ந்த காடாகவும் வண்டில் மாட்டுப் பாதையொன்றும்தான் இருந்தது. ஐம்பது அடி உயரத்திற்கும் மேற்பட்ட வீரமரம், பாலைமரம் மற்றும் பலவகை மரங்கள் சூழ்ந்த காட்டினூடாகவே அப்பாதையால் பயணிக்கவேண்டும். மந்திக் குரங்குகளின் முறட்டுச சத்தமும் அங்குமிங்கும் தாவும் இரைச்சலும் பயத்தில் மயிர் சிலிர்க்க வைக்கும்.
அங்குதான் முக்கியானதும், எங்கள் கிராமத்திற்கு இப்பெயர் வரக்காரணமாயுமிருக்கும் உருத்திரபுரீஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் அதாவது ஐம்பதாம் ஆண்டுகளில் அப்பிரதேசத்தில் செங்கற்களாலான இடிபாடு ஒன்று திரு வேலாயுதசாமி அவர்களால் கண்டறியப்பட்டது. பின்பு ஊர்ப்பெரியவரக்ளும் இணைந்து தோண்டிப்பார்த்து அவ்விடம் புராதன சிவன்கோவிலின் சிதைவுகள்தான் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டது. முதலில் திரு வேலாயுதசாமியார் அவர்களால் அப்பகுதியில் சிறு குடிசையொன்றில் உருவாக்கி;, மூலஸ்த்தானத்தில் வேல் மட்டுமேயிருந்த முருகன் ஆலயம் மட்டுமே அவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. என் சிறுவயதில் மாலை நேரங்களில பயமூட்டக்கூடிய சூழலில்தான் நான் அவ்விடத்தைப் பார்த்திருக்கின்றேன்; ஆனாலும் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திருந்தும் பக்கதர்கள் வருகை தருவதையம் நான் பார்த்திருக்கின்றேன். கோவிலுக்கருகிலுள்ள தாமரைப்பூக்கள் சூழ்ந்த குளம் கோவிலுக்கான சுற்றாடலை இயற்கையாவே அளித்திருப்தைக்காணும்போது பண்டையகாலத்தின் அச்சூழலைக் கற்பனையில் காணலாம். அத்திருத்தலத்தின் பெருமையினாலேயே எமது கிராமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
அக்காலத்தில் கூழாவடியில் எவ்விதமான வியாபாரநிலையமும் கிடையாது. சங்கக்கடை மட்டுமேயிருந்தது. மேலே குறிபபிட்ட பாடசாலையும் கொலனி நிர்வாகஸ்த்தவரின் (Colony Officer) வாசஸ்த்தலமுமே இருந்தன. சந்தியில் கூழாவுக்குப்பக்கத்தில் இருந்த ஆத்தி மரத்தடியில் அடுப்பேற்றி வெந்நீர்வைத்து அதில் தேநீர் தயாரித்து விற்பனை செய்து வந்தார் இரண்டாம் வீட்டு ஆச்சி என்பவர். 1958ம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் காட்டுமரங்களாலும் தென்னங்கிடுகினாலும் அமைத்த கடைதான் கூழாவடியில் முதன்முதல் உருவான தனியார் வர்த்தக நிலையமாகும்.
தொடரும்...
திரு: க.கயிலாயநாதன்
உருத்திரபுரம் கிராமம் பற்றிய தொடர் பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துகள்.
சயன் : உங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றிகள்