இப்பாடசாலை 1952இல் திரு.ச.அந்தோனிப்பிள்ளை என்பவரால் பற்றிக்கமம் என்றழைக்கப்பட்ட காணியில் ஓலைக்குடிசையில் 25 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே இப்பாடசாலை 58 ஆண்டுகால வரலாறு கொண்டது. இதன் ஆரம்ப கர்த்தா கத்தோலிக்க குருவான வண. பிதா. சூசைநாதர் என்பவராவார். இப்பாடசாலை A9 சாலையிலிருந்து மேற்கே, உருத்திரபுரம் செல்லும் பிரதான வீதியில் 4 ½ km தொலைவில் அமைந்துள்ளது.இப்பாடசாலைக்கு முன்னாலே ஓடுகின்ற இரணைமடு ஆற்றின் நீரும், சுற்றிலும் அமைந்துள்ள தென்னந்தோப்பும் இப்பாடசாலைக்கு இயற்கையான அழகையும்,மாணவர்களுக்கு கற்றலுக்கான சூழலையும் வழங்குகின்றது.
இப்பாடசாலை கத்தோலிக்க முகாமையாளரை கொண்டிருந்தாலும், சிறப்பான முகாமைத்துவமும் அதன் பலனாக விளைந்த நற்கல்வியும் , மேலான ஒழுக்கமும் அதிகளவான இந்துக்களையும் இப்பாடசாலையில் கற்பதற்கு தூண்டியது. 1952 இல் தரம் ஐந்து வரை மட்டும் இயங்கிய இப்பாடசாலை பின்னர் படிப்படியான வளர்ச்சிபெற்று வருகையில் 1963 ஆம் ஆண்டு இப்பாடசாலை அரசின் தேசிய மயமாக்கப்பட்டது. 1980 களில் இப்பாடசாலையில் GCE(O/L) வரை பயின்று நற்பெறுபேற்றை பெற்ற பலர் இன்று வன்னி சமூகத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு ஆசிரியை, அருட்சகோதரி.ஆமண்டீன் அவர்கள் தமக்கு மூன்று படங்களை கற்பித்துக்கொண்டு நிர்வாக வேலைகளையும் செய்ததையும், அதே காலப்பகுதியில் துடிப்புடன் செயற்பட்ட ஆசிரியை திருமதி.மாணிக்கவாசகர்(மகேஷ் teacher) ஐந்து பாடங்களை கற்பித்ததையும் நினைவுகூர்ந்தார்.
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடப்பெயர்வின் காரணமாக இப் பாடசாலைச் சூழலில் யாழ் மக்கள் அதிகம் பேர் தற்காலிகமாக குடியேறினர், இம்மாணவர்களுக்கும் இப்பாடசாலை தரமான கல்வியை வழங்கியது, அக்கலப்பகுதியிலேயே அதிகளவான மாணவர்களை இப்பாடசாலை கொண்டிருந்தது எனினும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர், ஆசிரியர்குழாம் சிறப்பான கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை வழங்கியதென்றே கூறலாம். இப்பாடசாலை 1996 ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு இடப்பெயர்வை சந்தித்தது அது “சத்யெய” ராணுவ நடவடிக்கையாகும்.
அக்கராஜன் பிரதேசத்திலுள்ள ஆரோக்கியபுரம் (8 ஆம் கட்டை) எனும் இடத்தில் 1996 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை இயங்கிய இப்பாடசாலை, பாடசாலையின் இன்றுவரையான GCE(O/L) சிறந்த பெறுபெற்றினையும் இடம்பெயர்ந்த நிலையில் ஈட்டிக்கொண்டது சிறப்பு அம்சமாகும். திரு. இதயராஜன் இதயரூபன் (1999 ஆம் ஆண்டு GCE(O/L) batch) 9 பாடங்களில் விசேட சித்தியும் , 2 பாடங்களில் திறமைச்சித்தியும் (9D, 2C) பெற்றுக்கொண்டார். பின்னாளில் இவர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி தற்போது மருத்துவராகவுள்ளார். இவரைபோன்ற பலர் உயிரியல்துறையிலும், கணிததுறையிலும், முகாமைத்துறையிலும், கலைத்துறையிலும், இன்னும் சிறப்பாக பொதுநலசிந்தனையுடன் செயற்படக்கூடிய பலரை இப்பாடசாலை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.
“இப்பாடசாலையை நிர்வகிப்போர் திருக்குடும்ப சபையைச்சேர்ந்த அருட்சகோதரிகள் ” என்பது மரபாகும். இந்த வரிசையில் தற்போதைய அதிபர் அருட்சகோதரி. அன்ரநீற்றா மாற்கு இப்பாடசாலையின் 10 வது அதிபராவார்.இதற்கு முன்னர் அதிபர்களாக இருந்தவர்களில் அருட்சகோதரி.ஆமண்டீன், அருட்சகோதரி.கொஷ்கா, அருட்சகோதரி.மரிய கொறற்றி, அருட்சகோதரி.எலிசபெத்தம்மா,அருட்சகோதரி.திரேசா சில்வா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
(இவர்கள் பணியாற்றிய காலம்,சேவைகள்,மற்றும்பாடசாலையின் இன்றைய நிலை மற்றும் தேவைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்). “இறைவனே எங்கள் ஒளி” எனும் வாசகத்தை தாரகமந்திரமாகக்கொண்டு இயங்கும் இப்பாடசாலை மென்மேலும் வளர நாமும் வாழ்த்துகின்றோம்.
தகவல்கள் : அருட்சகோதரி எலிசபத்
ஆசிரியர் யூலியட்
ஆசிரியர் கண்ணபிரான்
-உருத்திரபுரத்திலிருந்து குணா-
.
எமது கிராமத்தை கட்டியெழுப்புவதற்கு.. பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கு...மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு உதவி செய்ய யாராவது விரும்பின் நேரடியாக பாடசாலைகளை தொடர்பு கொள்ளலாம்.. இல்லாவிடின் duruthirapuram@gmail.com என்ற எமது மின்னஞ்சலினூடாக தொடர்பு கொண்டால் நாம் ஏற்பாடு செய்து தருவோம்.
Good,I like this article.
1.Gadeeswaran Sivakolunthu
(Building Engineer,Building contractor, Real estate broker in Canada)
2. I studied in St.Fatima for 11years (grade one to GCE O/L).I passed Scholarship exam in 1990(I am the only one passed this exam in (Uruthirapuram Koththani').
I got 1st rank from grade one to eleven.
3.I am just telling my story not to promote my name; I am really proud that I studied in
St. Fatima.
My email: gadees.engineer@gmail.com
Thanks Gadees anna. yah every one know you who studied in fatima on 1990s period.
தரமான பதிவு... தொடர வாழ்த்துகள்.
-குகன்-
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி குகன்