புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 190 புள்ளிகளை பெற்று கிளி. புனித பற்றிமா றோ.க.பாடசாலை மாணவன் சத்தியசீலன் டர்சன் மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக வந்துள்ளார்.
உருத்திரபுரம் பிரதேச கற்றல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், உருத்திரபுரம் பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பல சிரமத்திற்கு மத்தியில் வேலைகள் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் மற்றும் உருத்திரபுர உறவுகளே!!
உருத்திரபுரம் கிராமத்தை பல வழிகளிலும் வளர்க்க வேண்டியது நமது கடமை. வீரியமுள்ள தலைமுறையை பாடசாலைகளில் இருந்து தான் உருவாக்க முடியும். உங்களால் இயன்ற பங்களிப்புகளை பாடசாலைகளினூடாக வழங்கி பாடசாலைகளை ஊக்குவியுங்கள். மாணவர்களை ஊக்குவியுங்கள்.
இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சாதைனை புரிந்துள்ள கிளிநொச்சி புனித பற்றிமா றோ.க வித்தியாலைய மாணவருக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னமும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்.
கிளி புனித பற்றிமா றோ.க வித்தியாலைய வரலாறு பற்றிய குறிப்பை படிப்பதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள். பற்றிமா
-உருத்திரபுரம் வலைப்பதிவு குழுமம்-
0 கருத்துக்கள்:
Post a Comment